1,492 சவரன் நகை கொள்ளை போன வழக்கு : 4 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை
மதுரை நரிமேட்டில் அடகு கடை ஒன்றில் ஆயிரத்து 492 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில்,4 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை நரிமேட்டில் அடகு கடை ஒன்றில் ஆயிரத்து 492 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில், 4 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் நகைகளை கொள்ளையர்கள் மினி வேனில் ஏற்றிச் சென்றதாக கூறப்படுகிறது. அந்த எண்ணின் அடிப்படையாகக் கொண்டு, விசாரித்த போது, நான்கு பேர் சிக்கியதாக காவல்துறை வட்டார தகவல் தெரிவிக்கின்றன. கண்காணிப்பு கேமிராவில் சிக்கிய கொள்ளையன் குறித்தும் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story