தந்தை திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி
சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் மீட்டனர்
சென்னை ராயப்பேட்டை இஸ்மாயில் சாலையில் வசித்து வருபவர் முருகன். ஓட்டுநரான இவரின் 9 வயது மகள் அக்சயா தந்தை திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதுதொடர்பாக முருகன் அளித்த புகாரை தொடர்ந்து, சிசிடிவி பதிவு காட்சிகள் மூலம் சிறுமியை போலீசார் தேடி வந்தனர். அப்போது, வீட்டருகே வள்ளலார் தெருவில் சிறுமி உலவுவதைக் கண்ட போலீசார், உடனடியாக சென்று சிறுமியை மீட்டனர்.
Next Story