"5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேவையற்றது" - கல்வியாளர் ஆனந்தகிருஷ்ணன்

தமிழகத்தில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .
x
தமிழகத்தில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . இதை உறுதி செய்யும் வகையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.  இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 
இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும்,  கல்வியாளருமான ஆனந்தகிருஷ்ணன்,  தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது தேவையற்றது என்றும், அதற்கு பதிலாக மாணவர்களின் திறனை சோதிப்பதற்கு வேறு  முறைகளை கையாளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்