துணை மின் நிலையத்தில் தீ விபத்து : மின்சார ரயில் போக்குவரத்து பாதிப்பு

சென்னை, தாம்பரத்தை அடுத்த கடப்பேரி துர்கா நகரில் உள்ள துணை மின் நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
துணை மின் நிலையத்தில் தீ விபத்து : மின்சார ரயில் போக்குவரத்து பாதிப்பு
x
சென்னை, தாம்பரத்தை அடுத்த கடப்பேரி துர்கா நகரில் உள்ள துணை மின் நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த டிரான்ஸ்பார்மர்கள் எரிந்து சேதமானது. இந்த விபத்தால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, மின்சார ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர்,  2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.  இந்த விபத்தால் குரோம்பேட்டை, நாகல்கேணி, லட்சுமிபுரம் , அஸ்தினாபுரம், திருமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் 3 மணி நேரத்துக்கு மேல் மின்சாரம் தடைபட்டது.


Next Story

மேலும் செய்திகள்