ஒரே பகுதியில் தொடர் கொள்ளை : மூன்று வீடுகளில் கொள்ளையர்கள் கைவரிசை

நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள காவல்கிணறு கிராமத்தை சேர்ந்த மனோகரன் என்பவர் வீட்டின் கதவை உடைத்து, 5 சவரன் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடுத்து சென்றுள்ளனர்.
ஒரே பகுதியில் தொடர் கொள்ளை : மூன்று வீடுகளில் கொள்ளையர்கள் கைவரிசை
x
நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள காவல்கிணறு கிராமத்தை சேர்ந்த மனோகரன் என்பவர் வீட்டின் கதவை உடைத்து, 5 சவரன் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடுத்து சென்றுள்ளனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த மோகன்தாஸ் என்பவர் வீட்டில், 5 சவரன் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடுக்கப்பட்டுள்ளது.  அதேபோல் சந்திரன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து லேப்டாப், மற்றும் இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.வீட்டில் ஆட்கள் இல்லை என்பதை அறிந்த மர்மநபர்கள் ஒரே நாளில், ஒரே  பகுதியில் உள்ள மூன்று வீடுகளில் கொள்ளையடித்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்