முக்கொம்பு மேலணையின் கதவணை கட்டுமானப் பணிகள் : விரைந்து முடிக்கக் கோரிக்கை

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே, முக்கொம்பு மேலணைக்காக, புதிய கதவணைகள் கட்டும் திட்டத்தை முதலமைச்சர் பழனிச்சாமி தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
முக்கொம்பு மேலணையின் கதவணை கட்டுமானப் பணிகள் :  விரைந்து முடிக்கக் கோரிக்கை
x
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே, முக்கொம்பு மேலணைக்காக, புதிய கதவணைகள் கட்டும் திட்டத்தை முதலமைச்சர் பழனிச்சாமி தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.   ஆனால் இந்தப் பணிகள் 2 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதால் விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இடிந்து விழுந்த பழைய பாலம் போல குறுகலாக இல்லாமல், இருவழிச் சாலையாக அமைக்க வேண்டும் என்றும்,  வரும்  மழைக் காலத்திற்குள் கட்டி முடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால்,  முக்கொம்பு மேலணையின் 9 மதகுகள் உடைந்தன. இதையடுத்து, 387 கோடி ரூபாயில் கதவணை கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்