முகிலனை கண்டுபிடிக்க ஆட்கொணர்வு மனு
காவல்துறை பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு
சுற்றுச்சுழல் ஆர்வலர் முகிலனை கண்டுபிடித்து ஆஜர்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமண்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சுழல் பாதுகாப்பு இயக்கத்தின் செயற்பாட்டாளர் முகிலன் கடந்த சில நாட்களாக மாயமானார். இந்த நிலையில், மனித உரிமைகள் ஆர்வலரும் வழக்கறிஞருமான ஹென்றி தீபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், சென்னை மாநகர காவல் ஆணையர், காஞ்சிபுரம் விழுப்புரம் எஸ் பி, ஆகியோர் வெள்ளிக்கிழமை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது
Next Story