30,000 முதலாம் ஆண்டு மாணவர்களின் தேர்வு முடிவுகள் : உடனடியாக வெளியிட ராமதாஸ் வலியுறுத்தல்

அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டு உள்ள 150 பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படிக்கும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
30,000 முதலாம் ஆண்டு மாணவர்களின் தேர்வு முடிவுகள் : உடனடியாக வெளியிட ராமதாஸ் வலியுறுத்தல்
x
அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டு உள்ள 150 பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படிக்கும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட  பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை சம்பந்தப்பட்ட  கல்லூரிகள்  நிறைவு செய்யவில்லை என்றும், மாணவர்கள் நலன் சார்ந்த பணிகளுக்கான கட்டணத்தை கல்லூரிகள் செலுத்தவில்லை என்பதற்கும், மாணவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதால், தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்