நாகர்கோவில் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை

நாகர்கோவிலில் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத 3 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகர்கோவில் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை
x
நாகர்கோவிலில் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத 3 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அரசின் திட்டப் பணிகள் சம்பந்தமான கட்டுமான பணிகளுக்கு ஒப்பந்தம் விடுவதில் ஒப்பந்தகாரர்களிடம் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கடந்த சில நாட்களாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணித்து வந்தனர். நேற்று முன்தினம் வேர்கிளம்பி பேரூராட்சி அலுவலகத்தில் கணக்கில் வராத ஒரு லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் நாகர்கோவிலில் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் மாடசாமி சுந்தர்ராஜ் வாகனத்தில் இருந்து கணக்கில் வராத 3 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அவரிடம்  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்