போக்குவரத்து உதவி ஆய்வாளரை தாக்கிய காவல்நிலைய உதவி ஆய்வாளர்

சென்னை கோட்டையில் போக்குவரத்து உதவி ஆய்வாளராக இருப்பவர் பாலசுப்ரமணியம்.
போக்குவரத்து உதவி ஆய்வாளரை தாக்கிய காவல்நிலைய உதவி ஆய்வாளர்
x
சென்னை கோட்டையில் போக்குவரத்து உதவி ஆய்வாளராக இருப்பவர் பாலசுப்ரமணியம். இவர் செம்பியம் காவலர் குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அதே குடியிருப்பில் உள்ள பேசின்பிரிட்ஜ் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பாபு, பாலசுப்பிரமணியம் மற்றும் அவரின் மனைவி சாந்தியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு வந்த போலீசார், பாபுவிடம் விசாரணை நடத்தியதில், சீட்டு கட்டிய பணம் 18 ஆயிரத்தை திரும்பிக் கொடுக்கும் பிரச்சினையில் மோதல் நடந்ததாக தெரியவந்தது. பாபு குடிபோதையில் இருந்ததை அடுத்து, அவரை ஆயுதப்படைக்கு மாற்றி, சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்