ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கறிஞர் தர்ணா : போலீசார் இழுத்து சென்றதால் பரபரப்பு

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞரை போலீசார் இழுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கறிஞர் தர்ணா : போலீசார் இழுத்து சென்றதால் பரபரப்பு
x
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞரை போலீசார் இழுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை அண்ணாநகர் பகுதியில் சட்டவிரோதமாக அரசியல் பிரமுகர்  உதவியுடன் மது மற்றும் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, வழக்கறிஞர் சாமி என்பவர் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து போலீசார் அவரை இழுத்து சென்றனர். கடந்த சில நாட்களுக்கு 
முன், வழக்கறிஞர் சாமி நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்