இராகு பெயர்ச்சியையொட்டி சிறப்பு பூஜை
இராகு பெயர்ச்சியையொட்டி கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் சிறப்பு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இராகு பெயர்ச்சியையொட்டி கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் சிறப்பு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. வரும் 13 ந்தேதி ராகு பகவான் கடக ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைவதையொட்டி கோயிலில் கடந்த 7ம் தேதி தொடங்கிய முதல் கட்ட லட்சார்ச்சனை நிறைவு பெற்றது. திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் நடைபெற்ற பஞ்ச தீப ஆரத்தி வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள அக்னி வீரன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. தலிக்கோட்டை கிராமத்தில் உள்ள இந்த கோயிலில், கடந்த ஏழாம் தேதி முதல் சிறப்பு பூஜைகள் மற்றும் யாகங்கள் நடைபெற்று வந்தன. இதை தொடர்ந்து, இன்று கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story