கேரள பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கு : பாலியல் தொல்லை கொடுத்த லாரி ஓட்டுனர் கைது

கொடைக்கானலில் கேரளா பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக லாரி ஓட்டுனர் ஜெயசீலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கு : பாலியல் தொல்லை கொடுத்த லாரி ஓட்டுனர் கைது
x
கொடைக்கானலில் கேரளா பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக லாரி ஓட்டுனர் ஜெயசீலன் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த சாஜ் என்பவரின் மனைவி ரோகிணி, கடந்த 6 ஆம் தேதி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கணவர் கொடுத்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த கொடைக்கானல் போலீசார், தற்கொலைக்கு தூண்டிய வழக்கில்,  ஜெயசீலன் என்பவரை கைது செய்தனர். இதனிடையே, கொலைக்குற்றவாளியை கைது செய்ய கோரி, ஏராளமான பெண்கள், கொடைக்கானல் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் கைது செய்யப்பட்ட விவரத்தை போலீசார் கூறியதும் போராட்டம் கைவிடப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்