10 வகுப்பு மாணவி விடுதி அறையில் தூக்குப் போட்டு தற்கொலை..

தாராபுரத்தில், தனியார் பள்ளி விடுதியின் கணினி அறையில் பத்தாம் வகுப்பு மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
10 வகுப்பு மாணவி விடுதி அறையில் தூக்குப் போட்டு தற்கொலை..
x
திருப்பூரை சேர்ந்த மாணவி நவ்யா மற்றும் அவரின் தங்கை  திவ்யா இருவரும் அதே பள்ளி வளாகத்தில் செயல்படும் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் விடுதியின் கணினி அறையில் நவ்யா தூக்கில் தொங்கியதைக் கண்ட  விடுதி காப்பாளர் , சமையலர்களின் உதவியோடு சடலத்தை மீட்டு  தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால்,  மாணவி ஏற்கெனவே இறந்து விட்டதாக  மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த தாராபுரம் போலீசார் விடுதி காப்பாளரிடம்  விசாரணை செய்ததோடு,  விடுதிக்கு சென்றும் சோதனை செய்தனர். இது குறித்து கூறிய போலீசார் ,  மாணவியின் இறப்பு குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்