மருத்துவர் இல்லாமல் நடத்தப்பட்ட மருத்துவ முகாம்...

மருத்துவர் இல்லாமல் நடத்தப்பட்ட இலவச மருத்துவ முகாமிற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் ஊழியர்கள் திரும்பி சென்றனர்.
மருத்துவர் இல்லாமல் நடத்தப்பட்ட மருத்துவ முகாம்...
x
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மருத்துவர் இல்லாமல் நடத்தப்பட்ட இலவச மருத்துவ முகாமிற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் ஊழியர்கள் திரும்பி சென்றனர். தனியார் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம், மற்றும் முதலமைச்சர் காப்பீடு திட்ட பயனாளிகள் தேர்வு முகாம் கொடிக்காபட்டியில் நடைபெற்றது. இதில் மருத்துவமனை ஊழியர்கள் பங்கேற்று நோயாளிகளை பரிசோதித்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார், மருத்துவமனை ஊழியர்களை எச்சரித்து அனுப்பினர்.

Next Story

மேலும் செய்திகள்