விரைவில் நீரில் செல்லும் ஆம்புலன்ஸ் - அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி

நீரில் செல்லும் ஆம்புலன்ஸ் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
x
கடல் பகுதி மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் ஏற்படும் விபத்தின் போது, உயிரிழப்புகளை தடுக்கும்  வகையில், நீரில் செல்லும் ஆம்புலன்ஸ் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்து பேசிய அவர், கடந்த 7 ஆண்டுகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  பணியிடங்கள் வெளிப்படைத்தன்மையோடு நிரப்பப்பட்டுள்ளதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்