வாக்குப்பதிவின் போது மக்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்படாது - சென்னை மாநகராட்சி ஆணையர்

வாக்குப்பதிவு இயந்திரம், வாக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கும் இயந்திரங்கள் குறித்த விழிப்புணர்வு வாகன பயணம் சென்னையில் தொடங்கியது
x
சென்னை செனாய்நகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கொடியசைத்து வாகன பயணத்தை தொடங்கி வைத்தார். இந்த வாகனம் சென்னை மாநகரம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 913 இடங்களில் செயல்முறை விளக்கம் அளிக்க உள்ளது. ஒப்புகை சீட்டு கையில் வழங்கப்படாது எனவும் யாருக்கு ஓட்டளித்தோம் விபரம் 7 விநாடிகள் வரை மட்டுமே திரையில் தெரியும் என்றும் சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. செனாய்நகரில் நடந்த நிகழ்ச்சிக்கு பிறகு பேசிய அவர், 20 தொகுதி தேர்தலை எப்போது வேண்டுமானாலும் நடத்த தயார்நிலையில் இருப்பதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்