ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை கோரி அப்பலோ மருத்துவமனை வழக்கு
ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க கோரி அப்பலோ மருத்துவமனை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க கோரி அப்பலோ மருத்துவமனை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில், ஜெயலலிதா சிகிச்சை குறித்து விசாரிக்க நிபுணத்துவம் கொண்ட, தமிழக அரசு சாராத மருத்துவர்கள் கொண்ட சுதந்திரமான குழுவை நியமிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. வழக்கில் தீர்வு காணும்வரை மருத்துவ விவகாரங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு வருகிற 11 ஆம் தேதி நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வரவுள்ளது.
Next Story