9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை : குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறை..

9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி ராஜாவுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை : குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறை..
x
பெரம்பலூர் மாவட்டம் பொம்மணப்பாடி கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவர் கடந்த 2016ஆம் ஆண்டு, அதே கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக பெரம்பலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணை நிறைவுற்று ராஜா மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதனையடுத்து குற்றவாளி ராஜாவுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. கட்ட தவறினால் மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி விஜயகாந்த் தீர்ப்பளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்