தாயில்லாத மகளை சித்திரவதை செய்த தந்தை...

அடித்து, சூடு வைத்து துன்புறுத்தியதந்தை மீது நடவடிக்கை எடுக்க குழந்தை பாதுகாப்பு அதிகாரிகள் போலீசாருக்கு பரிந்துரை.
தாயில்லாத மகளை சித்திரவதை செய்த தந்தை...
x
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே சூரியக்கோடு பகுதியை சேர்ந்த மணிகண்டன், தனது மனைவி உயிரிழந்த நிலையில், 7 வயது மகள் மற்றும் 4 வயது மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் 2ம் வகுப்பு பயிலும் அந்த சிறுமியின் உடலில் உள்ள தீக்காயம் பற்றி வகுப்பு ஆசிரியை விசாரித்துள்ளார். அப்போது, தனது தந்தை சில மாதங்களாக அடித்து சூடு வைப்பதாக சிறுமி கூறியதை கேட்டு ஆசிரியை அதிர்ச்சி அடைந்ததோடு, குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிக்கு தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, 7 வயது சிறுமியை மீட்டுள்ள குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள், மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்