அரசு பள்ளியை தரம் உயர்த்த ஊர்வலமாக சென்று கல்வி சீர் வழங்கிய பெற்றோர்...

வாழப்பாடி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு தேவையான பொருள்களை பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் ஊர்வலமாக சென்று வழங்கினர்.
அரசு பள்ளியை தரம் உயர்த்த ஊர்வலமாக சென்று கல்வி சீர் வழங்கிய பெற்றோர்...
x
சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு தேவையான பொருள்களை பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் ஊர்வலமாக சென்று வழங்கினர். இப்பள்ளியை  தரம் உயர்த்தும் பணியில் ஆசிரியர்களும், மாணவர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், பள்ளியின் மேம்பாட்டில் அக்கறை கொண்ட பெற்றோர்களும், பொதுமக்களும்,  பள்ளிக்கு தேவையான நோட்டு, புத்தகங்கள், பாய், பென்சில் மற்றும் தளவாட சாமான்கள் உள்ளிட்ட பொருட்களை சொந்த செலவில் வாங்கி மேள வாத்தியம் முழங்க ஊர்வலமாக கொண்டு சென்று பள்ளிக்கு கல்விச் சீர் வழங்கினர். கல்விச் சீர் வழங்கிய பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவியர் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. 


Next Story

மேலும் செய்திகள்