300 ஏக்கரில் நெல் சாகுபடி பாதிப்பு : நிவாரணம் கோரி விவசாயிகள் மறியல்...

300 ஏக்கரில் நெல் சாகுபடி பாதிக்கப்பட்ட நிலையில் உரிய நிவாரணம் கோரி, விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
300 ஏக்கரில் நெல் சாகுபடி பாதிப்பு : நிவாரணம் கோரி விவசாயிகள் மறியல்...
x
அரியலூர் மாவட்டம், ராயம்புரத்தில் 300 ஏக்கரில் நெல் சாகுபடி பாதிக்கப்பட்ட நிலையில் உரிய நிவாரணம் கோரி, விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்குள்ள ராயம்புரம் ஏரியில், தண்ணீர் வறண்டதால், அதனை நம்பி விவசாயம் செய்த நெல் சாகுபடி பாதிப்படையும் தருவாயில் உள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தமிழக அரசிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். 

Next Story

மேலும் செய்திகள்