சின்னதம்பி யானை - உயர்நீதிமன்றம் உத்தரவு

சின்னதம்பி யானையின் நடமாட்டம் குறித்து வரும் 11ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
x
சின்னதம்பி யானையின் நடமாட்டம் குறித்து வரும் 11ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க, கோவை தடாகம் பகுதியில் உள்ள செங்கல் சூளைகளை மூட வேண்டும் என கோரி, விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஊருக்குள் சுற்றிவரும் யானை சின்னதம்பியை பிடித்து முகாமில் விடவேண்டும் எனவும் அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.  அதனை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்ரமணியம்பிரசாத் அமர்வு, சின்னதம்பியின் நடமாட்டம் குறித்து 11 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்