நாளை முதல் தொடர் போராட்டம் : பட்டாசு தொழிலாளர் பாதுகாப்புக் குழு முடிவு

பட்டாசு தொழிலுக்கு சுற்றுச்சூழல் விதியிலிருந்து விலக்கு அளிக்க கோரி நாளை முதல் தொடர் போராட்டம் நடத்த பட்டாசு தொழில் மற்றும் தொழிலாளர் பாதுகாப்புக் குழு முடிவு செய்துள்ளது.
நாளை முதல் தொடர் போராட்டம் : பட்டாசு தொழிலாளர் பாதுகாப்புக் குழு முடிவு
x
இந்த குழு சார்பில் சிவகாசியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பட்டாசு தொழிலாளர் நலன் காக்க அனைவரும் ஒன்றிணைந்து  தொடர் போராட்டம் நடத்த  முடிவெடுக்கப்பட்டுள்ளது. பட்டாசு தொழில் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் அளித்துள்ள மனுவை வாபஸ் பெறவேண்டும்,சரவெடி உற்பத்தி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க  வேண்டும், என வலியுறுத்தப்பட்டது. பட்டாசு ஆலைகள் மூன்று மாதங்களாக மூடப்பட்டுள்ளதால், தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு  வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்