ரூ. 1.5 கோடி கறுப்பு பணம் பறிமுதல் : ரகசிய பாக்கெட்டுகள் கொண்ட ஆடையில் பதுக்கி கடத்தல்

கோவையிலிருந்து கேரளாவுக்கு கடத்தப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் கறுப்பு பணத்தை, கேரள போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ரூ. 1.5 கோடி கறுப்பு பணம் பறிமுதல் : ரகசிய பாக்கெட்டுகள் கொண்ட ஆடையில் பதுக்கி கடத்தல்
x
கோவையிலிருந்து கேரளாவுக்கு கடத்தப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் கறுப்பு பணத்தை, கேரள போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ரகசிய தகவலின் அடிப்படையில், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிராவைச் சேர்ந்த 5 பேரை பாலகாட்டில், போலீசார் கைது செய்தனர். அப்போது, ரகசிய பாக்கெட்டுகளை கொண்ட பனியன் போன்ற உள்ளாடையில், அவர்கள் பணத்தை மறைத்து கடத்தியது தெரியவந்தது. ஒன்றை கோடி ரூபாயும் கணக்கில் காட்டப்படாத ஹவாலா பணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், கைது செய்யப்பட்ட ஐவரிடமும் தனித்தனியாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்