ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட இரு குடும்பம் : பஞ்சாயத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

கும்பகோணத்தில் கோவிலுக்கு பணம் கொடுக்காத இரு குடும்பத்தினரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட இரு குடும்பம் : பஞ்சாயத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு
x
கும்பகோணத்தில் கோவிலுக்கு பணம் கொடுக்காத இரு குடும்பத்தினரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள மொழையூரில், புதிதாக கோவில் கட்டுவதற்காக, வீட்டுக்கு தலா 4 ஆயிரம் வீதம் பஞ்சாயத்தார் வசூலித்த நிலையில், பாண்டியன் மற்றும் குமார் ஆகிய இருவரும், 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்ததாக தெரிகிறது. இதனால், ஊர் பஞ்சாயத்தினர் கூடி, கோயிலுக்குள் வர அவர்களுக்கு தடை விதித்ததோடு, அவர்களுடைய குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கும்பகோணம் கோட்டாட்சியரை அவர்கள் சந்தித்து பஞ்சாயத்தினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்