இழப்பீடு வழங்காத காப்பீட்டு நிறுவனத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு

திருச்சி மணப்பாறையை சேர்ந்த கவிச்சக்கரவர்த்தி என்பவரின் தந்தை ஜெயராமன் 2007ம் ஆண்டு நிகழ்ந்த விபத்தில் மரணம் அடைந்தார்.
இழப்பீடு வழங்காத காப்பீட்டு நிறுவனத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு
x
திருச்சி மணப்பாறையை சேர்ந்த கவிச்சக்கரவர்த்தி என்பவரின் தந்தை ஜெயராமன் 2007ம் ஆண்டு நிகழ்ந்த விபத்தில் மரணம் அடைந்தார். யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு செய்திருந்த அவருக்கான இழப்பீட்டு தொகையை அந்நிறுவனம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து கவிச்சக்கரவர்த்தி வழக்கு தொடர்ந்ததையடுத்து இழப்பீட்டு தொகை 21 லட்சம் ரூபாயை உடனே வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பிறகும் இழப்பீட்டு தொகையை வழங்காமல் காலதாமதம் செய்துவந்த  காப்பீட்டு நிறுவனத்தை ஜப்தி செய்ய திருச்சி கண்டோன்மென்ட் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை சற்றும் எதிர்பாராத காப்பீட்டு நிறுவனத்தின் பொதுமேலாளர்  உரிய தொகைக்கான காசோலையை பாதிக்கப்பட்ட நபரிடம் வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்