தீண்டாமை எந்த ரூபத்தில் வந்தாலும் ஏற்க முடியாது - தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் முருகன்

தீண்டாமை எந்த ரூபத்தில் வந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
தீண்டாமை எந்த ரூபத்தில் வந்தாலும் ஏற்க முடியாது - தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் முருகன்
x
மத்திய அரசின் திட்டங்களில் அதிகமாக பலன் பெற்ற மாநிலம் தமிழ்நாடு என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்..சத்திய மங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,  பஞ்சமி நிலங்களை மீட்பது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அது  தொடர்பான ஆய்வுக்கூட்டம் வரும் 11 ம் தேதி நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார் ... தீண்டாமை எந்த ரூபத்தில் வந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய முருகன்,  நாகரிக சமுதாயத்தில் இரட்டை டம்ளர் மற்றும் 3 டம்ளர் முறை எங்கிருந்தாலும் அதை கண்டறிந்து ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்