தை அமாவாசை : 10,008 எலுமிச்சை பழங்களால் ஆஞ்சநேயருக்கு அலங்காரம்...
தை அமாவாசையை முன்னிட்டு, விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு பத்தாயிரத்தெட்டு எலுமிச்சை பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
தை அமாவாசையை முன்னிட்டு கும்பகோணம் பாலக்கரை அருகே அமைந்துள்ள விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு பத்தாயிரத்தெட்டு எலுமிச்சை பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இந்த சிறப்பு வழிபாட்டில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மூலவரையும், உற்சவரையும் தரிசித்தனர். ஆஞ்சநேயருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு அர்ச்சனை செய்த எலுமிச்சை பழங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
Next Story