விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்...

75 சதவிகித கூலி உயர்வு கேட்டு கடந்த 8 நாட்களாக விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்...
x
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வட்டாரத்தில் 75 சதவிகித கூலி உயர்வு கேட்டு கடந்த 8 நாட்களாக விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  பள்ளிபாளையம் வட்டாரத்தில் உள்ள விசைத்தறி கூடங்களில்  5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர் அவர்கள் 75 சதவீத கூலி உயர்வு கேட்டு கடந்த 28 ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். ஏழாம் நாளான நேற்று மாலை பள்ளிபாளையம் அண்ணாநகர் பகுதியில் விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்