குடும்ப தகராறு : உணவில் விஷம் கலந்து மகன்களுடன் உண்ட தாய்...

மயங்கிக் கிடந்த அவர்களை மருத்துமனையில் அனுமதித்த நிலையில் 2 சிறுவர்களும் உயிரிழந்தனர்.
குடும்ப தகராறு : உணவில் விஷம் கலந்து மகன்களுடன் உண்ட தாய்...
x
திண்டிவனம் சந்தைமேடு பகுதியை சேர்ந்த பிரபு என்பவர் உயிரிழந்ததை அடுத்து அவரது மனைவி அம்மு, தனது மாமியார் வீட்டில் 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மாமியார் மீனாவுக்கும் அம்மு-வுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தனது 2 மகன்களுக்கும் உணவில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு அம்முவும் சாப்பிட்டுள்ளார். மயங்கிக் கிடந்த அவர்களை மருத்துமனையில் அனுமதித்த நிலையில் 2 சிறுவர்களும் உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அம்மு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்