சென்னை விமான நிலையத்தில் ரூ. 80 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட 80 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் ரூ. 80 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
x
சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட 80 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த விமானத்தில் சோதனையிட்ட போது, இருக்கையின் அடியில் 40 லட்ச ரூபாய் மதிப்பிலான 10 தங்கக்கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கபட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த அப்துல் ஹக்கீமை சுங்கத்துறையினர் கைது செய்தனர். இதேபோல் குப்பை தொட்டியில் சந்தேகத்திற்கு இடமாக கேட்பாரற்று கிடந்த ஒரு பார்சலில் இருந்து 40 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்