4 ஆசிரியர்கள் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு : பள்ளி மாணவிகள் சாலை மறியல்
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற 4 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் சாலைமறியல் செய்தனர்.
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற 4 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் சாலைமறியல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியின் ஆசிரியர்களை மீண்டும் அங்கேயே பணி அமர்த்த வேண்டும் என மாணவிகள் வலியுறுத்தினர். தகவலறிந்து வந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயகுமாரின் காலில் விழுந்து கதறி அழுது தங்கள் எதிர்ப்பை மாணவிகள் தெரிவித்தனர். பின்னர் மாணவிகளை சமாதானம் செய்த அவர் இதுகுறித்து அரசிடம் பரிந்துரைக்கப்படும் என்று உறுதியளித்தார்.
Next Story