மும்மத ஸ்தலங்களை இணைக்கும் ரயில் சேவை - இனிப்பு வழங்கி குமரி மக்கள் கொண்டாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிருந்து வேளாங்கண்ணிக்கு ரயில் சேவை தொடங்கப்பட்டதை ரயில் பயணிகள் சங்கத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
மும்மத ஸ்தலங்களை இணைக்கும் ரயில் சேவை - இனிப்பு வழங்கி குமரி மக்கள் கொண்டாட்டம்
x
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிருந்து வேளாங்கண்ணிக்கு ரயில் சேவை தொடங்கப்பட்டதை  ரயில் பயணிகள் சங்கத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். திருச்சி ஸ்ரீரங்கம், நாகூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட மும்மத ஸ்தலங்களையும் இணைக்கும் ரயில் சேவையை தொடங்க வேண்டும் என்பது குமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில், நாகர்கோவில் முதல் நெல்லை, மதுரை, திருச்சி, தஞ்சை மார்க்கமாக வேளாங்கண்ணிக்கு தனி ரயில் இயக்கப்பட்டது.  நாகர்கோவில் ரயில் நிலையத்தில் புதிய ரயிலில் பயணம் செய்த பயணிகளுக்கு ரயில் பயணிகள் சங்கத்தினர் இனிப்புகள் வழங்கி வழியனுப்பி வைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்