"வைகை அணை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
சிவகங்கை மாவட்டத்தில் வைகை நீர் செல்லும் கால்வாய்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் செல்வதை உறுதிப்படுத்த சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் தஞ்சாகூர் கிராமத்தில் உள்ள 6 ஊரணிகளுக்கு வரும் அனைத்து வாய்க்கால்களும் முறையாக தூர் வாரப்படாததால் தண்ணீர் வரவில்லை என்பதால் இதனை உடனே சரிசெய்ய வேண்டும் என மதுரையை சேர்ந்த பாலசுப்பிரமணியன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆறு ஊரணிகளுக்கு வைகை நீர் செல்லும் உழவன் மடை கால்வாய் மற்றும் செங்கன்மடை கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வைகை நீர் செல்வதை உறுதி செய்ய சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைக்கப்பட்டது.
Next Story