இளையராஜா 75 நிகழ்ச்சி நடத்தும் விவகாரம்: கணக்கு வழக்குகளை தாக்கல் செய்ய உத்தரவு
இளையராஜா 75 நிகழ்ச்சிக்கான வரவு செலவு கணக்குகளை கண்காணிக்க இடைக்கால நிர்வாகியை நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
இளையராஜா 75 நிகழ்ச்சிக்கான வரவு செலவு கணக்குகளை கண்காணிக்க இடைக்கால நிர்வாகியை நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. தயாரிப்பாளர் சதீஷ்குமார் தாக்கல் செய்த மேல் முறையீட்டை விசாரித்த நீதிபதி கிருபாகரன், நிகழ்ச்சி தொடர்பான கணக்கு வழக்குகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு உத்தரவிட்டார்.இந்தியாவே உற்று நோக்கும் மிகப்பெரிய கலைஞனுக்கு நடத்தும் பாராட்டு விழாவுக்கு தடை கோரியதன் மூலம் இளையராஜாவை அவமதித்து விட்டதாகவும், நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
Next Story