இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு தடை விதிக்க மறுப்பு: மார்ச் 3-க்கு முன்னதாக கணக்கு வழக்குகளை சமர்ப்பிக்க ஆணை - உயர்நீதிமன்றம்

இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளதோடு, தடை கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு தடை விதிக்க மறுப்பு: மார்ச் 3-க்கு முன்னதாக கணக்கு வழக்குகளை சமர்ப்பிக்க ஆணை - உயர்நீதிமன்றம்
x
இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளதோடு, தடை கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 2 மற்றும் 3-ல், இசையமைப்பாளர் இளைஞராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இதற்கு தடை விதிக்க கோரி தயாரிப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், சதிஷ்குமார் தொடர்ந்த வழக்கு, நீதிபதி கல்யாண சுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தது. கடைசி நேரத்தில் வழக்கு தாக்கல் செய்து உள்ளதாகவும், குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என கூறி மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்