1,000 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்

ஆவடி மற்றும் அம்பத்தூர் பகுதிகளில் ஆயிரம் கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
1,000 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்
x
ஆவடி மற்றும் அம்பத்தூர் பகுதிகளில் ஆயிரம் கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆவடியை அடுத்த அயப்பாக்கம் பகுதியில் தேன்ராஜ் என்பவர் தனது வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த 350 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல் அம்பத்தூர் ராமாபுரம் பெரியார் தெருவில் உள்ள ஒரு குடோனில் மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 650 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தேன்ராஜ், அப்பாஸ், சூரியபிரகாசம், கோபால் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்