ஆட்சியர் அலுவலகத்தில் நிர்வாணமாக ஓடிய வழக்கறிஞர்
மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நிர்வாணமாக ஓடிய வழக்கறிஞரை துரத்திப் பிடித்து போலீசார் கைது செய்தனர்.
மதுரை வண்டியூரில் செயல்படும் தனியார் கிளப் ஒன்றில் கஞ்சா, மது விற்பனையுடன், சீட்டாட்டம் நடைபெறுவதாக மாநகர் போலீஸில் வழக்கறிஞர் சாமி புகார் அளித்துள்ளார். தற்பொழுது அந்த கிளப் தரப்பில் கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அவர் நிர்வாணமாக ஓடினார். அவரை துரத்திப் பிடித்த போலீசார், கைது செய்தனர். முன்னதாக மாவட்ட நீதிமன்றத்தில் இதே போன்று அவர் நிர்வாணமாக ஓடியுள்ளார்.
Next Story