சென்னை வடபழனி கோவில் புதிய தக்கார், கோவை 'தினமலர்' வெளியீட்டாளர் ஆதிமூலம் நியமனம்
சென்னை வடபழனி கோவிலின் தக்காராக ஆதிமூலம் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை வடபழனியில் உள்ள வடபழனி ஆண்டவர் திருக்கோவிலின் தக்காராக, 'தினமலர்' நாளிதழின் கோவை பதிப்பு வெளியீட்டாளர் எல். ஆதிமூலம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான, நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆதிமூலத்திடம் வழங்கினார். தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அறநிலைய துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், இந்து சமய அறநிலைய துறை ஆணையர் பணீந்திர ரெட்டி ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story