"ஜாக்டோ ஜியோ அமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைக்க முடியாது" - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்

ஜாக்டோ ஜியோ அமைப்பினரை பேச்சு வார்த்தைக்கு அழைக்க முடியாது என உயர்நீதிமன்றத்தில் அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஜாக்டோ ஜியோ அமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைக்க முடியாது - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்
x
ஜாக்டோ ஜியோ அமைப்பினரை பேச்சு வார்த்தைக்கு அழைக்க முடியாது என உயர்நீதிமன்றத்தில் அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பணி இடைநீக்கத்தை எதிர்த்து ஆசிரியர் ஒருவர் தொடர்ந்த வழக்கு, நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. ஜாக்டோ ஜியோ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  பேச்சு வார்த்தை நடத்த அரசு முன் வந்தால் உடனடியாக போராட்டத்தை கைவிட தயார் எனவும்,  பேச்சு வார்த்தை நடத்த முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், வழக்கு நிலுவையில் இருப்பதால் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். இதையடுத்து, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இரு தரப்பும் முடிவெடுக்கும்படி நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்