அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்: "உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்"- முதலமைச்சர் வேண்டுகோள்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்புமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
x
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்புமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 7வது ஊதிய குழு பரிந்துரையை ஏற்ற முதல் மாநிலம் தமிழகம் எனவும், கடுமையான நிதிச் சுமைக்கு இடையிலும் 14 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு சம்பள உயர்வு வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

கஜா புயல் நிவாரண பணிகள் பெரும் சுமையாக உள்ள நிலையில் உரிமைகளை பேசுவது மக்கள் பணிக்கு பொருத்தமாக இருக்காது எனவும் மக்களின் நலனுக்காக செயல்படுவதில் அரசு ஊழியர்களுக்கும் முழு பங்கு உண்டு என்பதால் உடனடியாக பணிக்கு திரும்புமாறு அன்புடன் அழைப்பதாகவும் முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்