நிலக்கரி கையாளுவதில் புதிய சாதனை - தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் அசத்தல்
தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் நிலக்கரி கையாளுவதில் புதிய சாதனை படைத்துள்ளது.
தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் நிலக்கரி கையாளுவதில் புதிய சாதனை படைத்துள்ளது. என்.எல்.சி தமிழ்நாடு பவர் லிட் நிறுவனம் தனது மூலப்பொருளான நிலக்கரியை தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தின் மூலம் கையாண்டு வருகிறது. தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி வரை 53 ஆயிரத்து 260 டன் அளவு நிலக்கரி கையாளபட்டதே சாதனையாக இருந்து வந்தது. இந்நிலையில் 59 ஆயிரத்து 839 டன் நிலக்கரி கையாண்டு வ.உ.சி துறைமுகம் புதிய சாதனை படைத்துள்ளது.
Next Story