ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இன்று தீர்ப்பு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறப்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறப்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அசம்பாவிதங்கள் நிகழா வண்ணம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி நகரில் முக்கிய பகுதிகளில் ஏற்கெனவே பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தீர்ப்பை பொருத்து பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும் என்று கூறிய, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, காவல்துறை தடையை மீறி கடலுக்கு சென்ற பதிவு செய்யப்படாத விசைப் படகுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
Next Story