கார் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து - 3 பேர் பலி

கோவை: ஜலத்தூர் கிராமத்தை சேர்ந்த அருண்குமார் தனது நண்பர்கள் வீரன் மற்றும் சந்தோஷுடன் அய்யம்பாளையம் பகுதியில் வந்துக்கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த சொகுசு கார் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்தானது.
கார் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து - 3 பேர் பலி
x
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஜலத்தூர் கிராமத்தை சேர்ந்த அருண்குமார் தனது நண்பர்கள் வீரன் மற்றும் சந்தோஷுடன் அய்யம்பாளையம் பகுதியில் வந்துக்கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த சொகுசு கார் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்தானது. இதில் நண்பர்கள் 3 பேரும் தூக்கி வீசப்பட்டதில் வீரன் மற்றும் சந்தோஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த அருண்குமாரை மீட்டு மருத்துவமனிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவரும் உயிரிழந்தார். இந்த விபத்து சம்பந்தமாக அருகில் உள்ள பெட்ரோல் பங்கின் சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்