சிறுநீரகம் செயலிழந்த மகன் - இடுப்பில் சுமந்து வந்த பெற்றோர் ஆட்சியரிடம் மனு

சேலத்தில் சிறுநீரகம் செயலிழந்த மகனை இடுப்பில் சுமந்தபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த பெற்றோர் உதவி கேட்டு மனு அளித்தனர்.
x
சேலத்தில் சிறுநீரகம் செயலிழந்த மகனை இடுப்பில் சுமந்தபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த பெற்றோர் உதவி கேட்டு மனு அளித்தனர். 

சேலம் மகுடஞ்சாவடியை அடுத்த பட்டச்சாமி கோவில் பகுதியை சேர்ந்தவர்  முத்துசாமி. அவரது 19 வயது மகன் பாபுவுக்கு சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு செயலிழந்து விட்டன. இதனால் உடல் மெலிந்து நடக்க முடியாமல் அவதிப்படும் பாபுவை இடுப்பில் சுமந்து கொண்டு பெற்றோர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். 

கூலி வேலை செய்யும் தன்னால் மகனின் சிறுநீரக சிகிச்சைக்கான செலவை சமாளிக்க முடியவில்லை என்று கூறிய பாபுவின் தந்தை, மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 

Next Story

மேலும் செய்திகள்