ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பணிநீக்கம்
தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை தொடங்கியது
வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை பணியிடைநீக்கம் செய்யும் நடவடிக்கையை தமிழக அரசு தொடங்கி உள்ளது . திருச்சியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன் உள்ளிட்ட 6 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளனர் . அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு கைதாகி சிறையில் உள்ள 14 ஆசிரியர்கள் உட்பட 15 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் இதேபோல் பல மாவட்டங்களில் 420 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Next Story