"எப்போது தேர்தல் அறிவித்தாலும் நடத்த தயார்" - தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல்

காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கும்,எப்போது தேர்தல் அறிவிப்பட்டாலும், அதனை நடத்த தயாராக உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
எப்போது தேர்தல் அறிவித்தாலும் நடத்த தயார் - தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல்
x
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி சென்னை மாநகராட்சி அலுவலகத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கான உதவி மையத்தை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்து வரும் அனைத்து தேர்தல்களிலும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளக்கூடிய "விவிபாட்" கருவி பயன்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார். காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கும், நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் எப்போது தேர்தல் அறிவிப்பட்டாலும் அதனை நடத்த தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்