சாலை ஓரத்தில் உயிருக்கு போராடிய புள்ளி மான்
கொம்புகள் வெட்டப்பட்ட நிலையில் கிடந்ததால் பரபரப்பு
புதுக்கோட்டையில் சாலை ஓரத்தில் உயிருக்கு போராடிய புள்ளிமானால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.அங்குள்ள குடுமியான்மலையில் சாலை ஓரத்தில் புள்ளிமான் ஒன்று இரு கொம்புகளும் வெட்டப்பட்ட நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்துள்ளது. இதையடுத்து, அங்கு அப்பகுதி மக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், தகவல் அறிந்து வந்த வனத்துறையினரிடம் புள்ளிமான் ஒப்படைக்கப்பட்டது.
Next Story