பெண்கள் விடுதி - நீதிமன்றம் அதிரடி

பெண்கள் விடுதிகளுக்கு அனுமதி கொடுப்பதில் முறைகேடு நடப்பதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது
பெண்கள் விடுதி - நீதிமன்றம் அதிரடி
x
* பெண்கள் மற்றும் மாணவிகள் தங்கும் விடுதிகளுக்கு அனுமதி வழங்கப்படும் போது அரசின் விதிமுறைகள் எதுவும் கடைபிடிக்கப்படுவது இல்லை என உயர்நீதிமன்ற மதுரைகிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

* அதில், முறையான கட்டமைப்பு இல்லாத வீடுகள் விடுதிகளாக செயல்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

* சென்னை அருகே ஆதம்பாக்கத்தில் முறையான அனுமதி பெறாத விடுதி ஒன்றில், அதன் உரிமையாளரே ரகசிய கேமரா வைத்த அதிர்ச்சி சம்பவமும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள், இல்லங்களை ஒழுங்கு படுத்தும் சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும் எனவும்

* முறைகேடாக சான்றிதழ்கள் பெறுவோர், வழங்கும் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டிருந்தது.

* இதனை விசாரித்த நீதிபதிகள், சமூக நலத்துறையின் செயலர்,  தீயணைப்பு மற்றும் மீட்பு  சேவை துறை   இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். 

* மாவட்ட வாரியாக,  பெண்கள் விடுதிகள் மற்றும் இல்லங்களுக்கு அனுமதி கேட்டு எத்தனை விண்ணப்பங்கள்,  வழங்கப்பட்டுள்ளன என்றும் 

* அந்த விண்ணப்பங்கள் மீதான  நடவடிக்கை எந்த நிலையில் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்